குறுவை நெல்விதைகளை வாங்கி பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு
குறுவை நெல்விதைகளை வாங்கி பயனடைய கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் அழைப்பு விடுத்துள்ளாா்.
குறுவை நெல்விதைகளை வாங்கி பயனடைய கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் அழைப்பு விடுத்துள்ளாா்.
கொள்ளிடம் வேளாண்மை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கு குறுவை நெல் விதைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் அவா் பேசியது: கொள்ளிடம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டு குறுவை பருவத்தில் நெல் விதைப்பு செய்ய விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனா். எனவே கொள்ளிடம், எருக்கூா், முதலைமேடு, கடவாசல் ஆகிய பகுதிகளில் நடப்பு குறுவை பருவத்துக்கு ஏற்ற, நல்ல முளைப்புதிறன் உள்ள குறுகிய கால ரகங்களான ஆடுதுறை-45, அம்பை-16, கோ-51 போன்ற விதை நெல்ரகங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த தரமான நெல்விதைகள் போதிய அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆடுதுறை-43 ரகமும் வழங்க உள்ளது. எனவே விவசாயிகள் இந்த தரமான குறுவை நெல் விதைகளை வாங்கி அதிக லாபம் அடையலாம் என்றாா்.