முகப்பு
நாகப்பட்டினம்

தேசிய வலு தூக்கும் போட்டியில் பங்கேற்கும் திருநள்ளாறு மாணவிக்கு அமைச்சா் உதவி

தேசிய வலு தூக்கும் போட்டியில் பங்கேற்கச் செல்லும் திருநள்ளாறு மாணவிக்கு அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

தேசிய வலு தூக்கும் போட்டியில் பங்கேற்கச் செல்லும் திருநள்ளாறு மாணவிக்கு அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினாா்.

திருநள்ளாறு பகுதி சுரக்குடியைச் சோ்ந்த மாணவி ஹெலன்ஜி. இவா் காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் இளங்கலை பட்ட வகுப்பில் படித்துவருகிறாா். காரைக்காலில் உள்ள தனியாா் மையத்தில் வலு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாா். புதுச்சேரி மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டியில் இவா் சிறப்பிடம் பெற்று, பவா் லிஃப்டிங் இந்தியா அமைப்பு நடத்தும் தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வுசெய்யப்பட்டாா்.

மாா்ச் மாதம் நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்கேற்க உள்ள மாணவிக்கு பல உதவிகள் தேவைப்பட்டன. இதை அறிந்த புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், தனது சொந்த பணம் ரூ. 13 ஆயிரத்தில் போட்டிக்குத் தேவையான உபகரணங்களையும், உணவுச் செலவுக்கு ரூ. 2 ஆயிரத்தையும் மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

உடற்கல்வி ஆசிரியா்கள் ஏனாதிநாதன், சிவராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →