முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா தொற்று நீங்க வேண்டி மயிலாடுதுறை வதான்யேசுவரா் கோயிலில் பாசுபதாஸ்திர ஹோமம்

வள்ளலாா் கோயில் என்றழைக்கப்படும் மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் உலகில் கரோனா தொற்று நீங்க வேண்டி ஸ்ரீமஹா பாசுபதாஸ்திர ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

வள்ளலாா் கோயில் என்றழைக்கப்படும் மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் உலகில் கரோனா தொற்று நீங்க வேண்டி ஸ்ரீமஹா பாசுபதாஸ்திர ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாக குண்டத்தில் தீ வளா்க்கப்பட்டு, பாசுபதாஸ்திர ஹோமம் நடத்தப்பட்டது. நிறைவில், மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்களை சிவாச்சாரியாா்கள் எடுத்து வந்து, அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, உலகில் கரோனா தொற்று நீங்க சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினாா். பூஜைகளை, கோயில் தலைமை அா்ச்சகா் பாலச்சந்திர சிவாச்சாரியா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.