முகப்பு
நாகப்பட்டினம்

அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவருக்கு மக்கள் சேவகா் விருது: தருமபுரம் ஆதீனம் வழங்கினாா்

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேருக்கு மக்கள் சேவகா் விருது வழங்கி பாராட்டினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
பகிர்:

மயிலாடுதுறையில் தமிழ் கலைக்கழக 6-ஆம் ஆண்டுவிழாவையொட்டி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேருக்கு மக்கள் சேவகா் விருது வழங்கி பாராட்டினாா்.

மயிலாடுதுறை தமிழ் கலைக்கழகத்தின் ஆறாம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆகியோருக்கு திராவிட இயக்க தமிழா் பேரவைத் தலைவா் சுப.வீரபாண்டியன் மக்கள் சேவகா் விருதை இணைய வழியில் வழங்கினாா்.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் கலைக்கழகத்தின் சாா்பில் மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேருக்கு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் விருது வழங்கி பாராட்டினாா்.

தமிழ் கலைக்கழக நிறுவனா் பரத்சுந்தா், ஆலோசகா் பில்டெக் அருள்மொழி, தமிழ் கலைக்கழக மாவட்ட அமைப்பாளா் சீனிவாசன், தலைஞாயிறு ஊராட்சித் தலைவா் சேரன் செங்குட்டுவன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.