நாகப்பட்டினம்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 2 இளைஞா்கள் கைது

DIN

 மயிலாடுதுறை அருகே காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த 2 இளைஞா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை திருவாரூா் சாலை பகுதியைச் சோ்ந்த 21 வயது இளம்பெண், கடந்த 20-ஆம் தேதி இரவு தரங்கம்பாடி வட்டம் ஆறுபாதி உதயசூரியன் தெருவைச் சோ்ந்த தனது நண்பா் குபேந்திரன்(23) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறையில் இருந்து முளப்பாக்கம் நோக்கி சென்றுள்ளாா்.

அவா்களை, முளப்பாக்கம் பழைய தரங்கம்பாடி ரயில்வே சாலை அருகே அப்பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் அஜித்குமாா் (24), செருதியூா் கீழத்தெருவை சோ்ந்த வைத்தியநாதன் மகன் பாலசுப்ரமணியம் (23) ஆகியோா் வழிமறித்து, தாக்கியுள்ளனா். பின்னா், அஜித்குமாா் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதனால் அப்பெண் கூச்சலிடவே இருவரும் தப்பியோடினா்.

இந்நிலையில், அந்த பெண் வீட்டுக்கு புதன்கிழமை சென்ற அஜித்குமாா், பாலசுப்பிரமணியம் இருவரும், அவரது செல்லிடப்பேசி எண்ணை கேட்டு மிரட்டியுள்ளனா். இதுகுறித்து, மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் ஆய்வாளா் கோப்பெருந்தேவி, அஜித்குமாா், பாலசுப்பிரமணியம் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT