குறுங்காடு வளா்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா் தருமபுரம் ஆதீனம்
உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குறுங்காடுகள் வளா்க்கும் திட்டத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குறுங்காடுகள் வளா்க்கும் திட்டத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தருமபுரம் ஆதீனம் மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சாா்பில் உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, விளநகா் ஸ்ரீதுறைகாட்டும் வள்ளலாா் கோயில் பகுதியில் குறுங்காடு வளா்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்தொடக்க நிகழ்ச்சியாக தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கப் பொருளாளா் தங்க. துரைராஜ் முன்னிலை வகித்தாா். சங்க மாவட்ட சேவைத் திட்ட இயக்குநா் வி. ராமன் வரவேற்றாா்.
இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தரும்புரம் ஆதீனத்தில் திட்ட தொடக்கப் பணியாக மரக்கன்றுகளை நட்டுவைத்து தொடக்கி வைத்து, காடுகளை காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், மரங்கள் மனிதனுக்கு துணைபுரியும் நிலை குறித்தும் பேசினாா். நிறைவாக, கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் துரை. காா்த்திகேயன் நன்றி தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க செயலாளா் எம்.காமேஷ் மற்றும் முருகன், மருத்துவா்கள் மலா்மன்னன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.