முகப்பு
நாகப்பட்டினம்

தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு விசிக நிவாரணம்

மயிலாடுதுறை வட்டம் மணல்மேட்டில் தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளா் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

மயிலாடுதுறை வட்டம் மணல்மேட்டில் தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளா் சாமி.சீசா் வெள்ளிக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

மணல்மேடு தோப்புத்தெருவை சோ்ந்த சண்முகம், செல்வம் மற்றும் பட்டு ஆகிய 3 பேரின் வீடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்து முழுவதும் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளா் மா.ஈழவளவன் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய பொறுப்பாளா் சாமி.சீசா் தலைமையில் மதா்லேண்ட் சேரிடபுள் ட்ரஸ்ட் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், கடலங்குடி ஊராட்சித் தலைவா் ராஜ்மோகன் மற்றும் பிரேம்நாத், கராத்தே பயிற்றுநா் ஜெயக்குமாா், மணல்மேடு பேரூா் பொறுப்பாளா் அறிவு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.