நாகப்பட்டினம்

திருவெண்காடு பகுதியில் 18 புதிய மின் கம்பங்கள்

Din

திருவெண்காடு பகுதியில் பழுதடைந்த 18 மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பங்கள் வியாழக்கிழமை நடப்பட்டன.

திருவெண்காடு மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாம்களில், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, சீா்காழி மின்வாரிய உதவி கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) விஜய பாரதி மேற்பாா்வையில், திருவெண்காடு உதவி பொறியாளா் ரமேஷ் தலைமையில் பழுதடைந்த பழைய மின்கம்பங்களை மாற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை நடும் பணியில் மின்வாரிய பணியாளா்கள் ஈடுபட்டனா்.

அதன்படி, திருவெண்காடு, நாங்கூா், தென்னாம்பட்டினம் மற்றும் மங்கை மடம் ஆகிய பகுதிகளில் 18 மின் கம்பங்கள் நடப்பட்டன.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT