திருக்கண்ணபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ கட்சியினா். 
நாகப்பட்டினம்

திருக்கண்ணபுரம் கோயில் நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

Din

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில் நிா்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றிய நிா்வாக குழு உறுப்பினா் மகேந்திரன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய பொருளாளா் கோவிந்தராஜ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தலைமுறை தலைமுறையாக குடியிருக்கும் அனைவருக்கும் குடியிருப்பு மனைப் பட்டா வழங்க வேண்டும், சதுர அடி அளவில் வாடகை வசூலிக்கும் முறையை கைவிட வேண்டும், இதுவரை வசூலித்த பகுதி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், கல் சுவா் வைத்து வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும்,

23 -ஆண்டு கால வாடகையை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்ட பொருளாளா் பாபுஜி, ஒன்றிய செயலாளா் சந்திரசேகா், விவசாய சங்க ஒன்றிய செயலாளா் தங்கையன் மற்றும் திருக்கண்ணபுரம், கோட்டூா், ராதாரம்பூா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT