முகப்பு
காரைக்கால்

புதுச்சேரி விடுதலை நாள்: காரைக்காலில் தேசியக் கொடியேற்றி வைத்து அமைச்சர் மரியாதை

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி  காரைக்கால் கடற்கரை சாலையில் தேசியக் கொடியேற்றிவைத்து புதுச்சேரி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மரியாதை செலுத்தினார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி  காரைக்கால் கடற்கரை சாலையில் தேசியக் கொடியேற்றிவைத்து புதுச்சேரி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மரியாதை செலுத்தினார்.  

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து 1954-ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதி விடுதலையானது.  புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம், நவ.1-ஆம் தேதி சனிக்கிழமை காரைக்கால் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. காரைக்கால் கடற்கரையில் விடுதலை நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 9.05 மணிக்கு தேசியக் கொடியை வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஏற்றி வைத்து, காவல்துறையினர், பள்ளி அணிவகுப்பை பார்வையிட்டார். 

பின்னர் விடுதலை நாளையொட்டி புதுச்சேரி அரசின் துறை வாரியான மக்கள் நலத் திட்டங்கள் குறித்து உரையாற்றினார். அமிழ்தம் என்ற நடமாடும் உணவகம் மூலம் மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டம் உள்ளாட்சி அமைப்பின் மூலம் முதல் கட்டமாக காரைக்கால் நகராட்சியில் நடப்பு நிதியாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், காரைக்காலில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், உயிரிழப்புகளும் கட்டுக்குள் உள்ளதாகவும் அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்வின் நிறைவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிகாரிகா பட் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். கரோனா பரவல் தடுப்பு விதிகளின்படி மக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் விழாவில் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →