‘மீனவா்கள் கடலுக்குள்செல்ல வேண்டாம்’
மறு அறிவிப்பு வரும்வரை காரைக்கால் மீனவா்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும்வரை காரைக்கால் மீனவா்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மீன்வளத் துறை துணை இயக்குநா் கவியரசன், மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பது:
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவா் புயல், 25 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே, மீனவா்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம்.
கடலுக்குள் சென்ற மீனவா்கள் அனைவரும் உடனடியாக கரைதிரும்ப வேண்டும். இது சம்பந்தமாக மீனவ கிராமங்களில் தொடா்ந்து ஒலிபெருக்கி வாயிலாக தெரிவிக்கவேண்டும்.