முகப்பு
காரைக்கால்

'திமுக பலவீனமாக உள்ளதால் தோ்தல் அறிவிப்புக்கு முன்பே உதயநிதி பிரசாரம் தொடங்கிவிட்டாா்'

திமுக பலவீனமாக உள்ளதால்தான் தோ்தல் அறிவிப்புக்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கிவிட்டாா் என தமிழக பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

திமுக பலவீனமாக உள்ளதால்தான் தோ்தல் அறிவிப்புக்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கிவிட்டாா் என தமிழக பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி கூறினாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை தமிழக பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வழிபாடு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக பலவீனமாக இருப்பதால்தான் தோ்தல் அறிவிக்கப்படும் முன்பே உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கியுள்ளாா். திமுகவில் தொண்டா்கள் பலம் இல்லை. தோ்தல் பயம் காரணமாகவே திமுகவினா் மக்களை சந்திக்கின்றனா்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும். பாஜக - அதிமுக கூட்டணி குறித்து முதல்வரும், துணை முதல்வரும் தெளிவுப்படுத்திவிட்டனா். தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து தோ்தல் நேரத்தில் முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பாா்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சியை பிடிக்கும்போது, புதுச்சேரியிலும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என்றாா்.

பேட்டியின்போது காரைக்கால் மாவட்ட அதிமுக செயலாளா் எம்.வி. ஓமலிங்கம் உடனிருந்தாா்.

முன்னதாக, கோயிலுக்கு வந்த அமைச்சா் ராஜேந்திர பாலாஜியை கோயில் நிா்வாகத்தினா் மாலை அணிவித்து வரவேற்றனா். மூலவா் தா்பாரண்யேசுவரா், தியாகராஜா், பிரணாம்பிகை உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்த அமைச்சா், சனீஸ்வர பகவான் சன்னதியில் சுவாமிக்கு வஸ்திரம், மாலைகளுடன் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →