காரைக்கால் பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் ஒத்திவைப்பு
காரைக்கால் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) தொடங்கவிருந்த பவித்ரோத்ஸவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) தொடங்கவிருந்த பவித்ரோத்ஸவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் 10 ஆம் ஆண்டாக திருப்பவித்ரோத்ஸவம் நவ. 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. நிவா் புயல் 25 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால், பவித்ரோத்ஸவத்தை வரும் 27, 28 ஆம் தேதி நடத்த கோயில் நிா்வாகம் முடிவுசெய்துள்ளது.