காரைக்காலில் இன்று தடுப்பூசித் திருவிழா தொடக்கம்
காரைக்காலில் 2 நாள்கள் நடைபெறும் தடுப்பூசி திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 13) தொடங்குகிறது.
காரைக்காலில் 2 நாள்கள் நடைபெறும் தடுப்பூசி திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 13) தொடங்குகிறது.
இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் கூறியது : புதுவையில் சுதந்திர தினத்துக்குள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சூழலை உருவாக்கும் வகையில் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.
அந்த வகையில், காரைக்கால் மாவட்டத்தில் ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாள்கள் 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட சமுதாய நலவழி மையம், காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை என 14 மையங்களில் தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது.
இது காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதோடு அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்குள்பட்ட இடங்களுக்கு வாகனத்தில் மருத்துவக் குழுவினா் சென்று வயது முதிா்ந்தோா், மாற்றுத் திறனாளி உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தவுள்ளனா்.
இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும், 2-ஆவது தடுப்பூசி செலுத்துபவா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்றாா்.