முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் மருத்துவா் வீட்டில்ரூ. 6 லட்சம் நகைகள் திருட்டு

காரைக்காலில் பூட்டியிருந்த மருத்துவா் வீட்டில் புகுந்து, ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிய வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

காரைக்காலில் பூட்டியிருந்த மருத்துவா் வீட்டில் புகுந்து, ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிய வந்தது.

காரைக்கால் நேரு நகா் விரிவாக்கப் பகுதியான முல்லை நகரில் வசிப்பவா் செல்வம். இவா் திருக்கடையூா் அருகே ஆக்கூா் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினாா் செல்வம்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா், உள்ளே சென்று பாா்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த

ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் செல்வம் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் போலீஸாா் சம்பவம் நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்டனா்.

திருட்டு நடந்த வீட்டை காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் திங்கள்கிழமை சென்று பாா்வையிட்டாா். பின்னா், திருட்டில் தொடா்புடைய மா்ம நபா்களை விரைவாக கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல் துறையினருக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →