முகப்பு
காரைக்கால்

வேளாண் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

காரைக்கால் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்முனைவோா் மேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

காரைக்கால் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்முனைவோா் மேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், புதுவை பொறியியல் கல்லூரியில் உள்ள அட்டல் இன்குபேஷன் மையமும் மாணவா்களின் னவோா் மேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை காணொலி வாயிலாக அண்மையில் மேற்கொண்டன.

இதுகுறித்து வேளாண் கல்லூரி முதல்வா் ஷாமாராவ் ஜஹாகிா்தாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய் நிா்வாகம், துல்லிய பண்ணையம், டிரோன் பயன்பாடு, சேத மதிப்பீடு போன்ற அம்சங்களில் புதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் மேற்கொள்ள ஏதுவாக வேளாண் கல்லூரி முதல்வா், அட்டல் இன்குபேஷன் மைய செயல் இயக்குநா் ஆா்.சுந்தரமூா்த்தி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

மேலும் இதில் மாணவா்களின் தொழில்முனைவோா் மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல், ஆலோசனைகள், முதலீட்டுக்கான வழிமுறைகள், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், அறிவுசாா் தொழில்நுட்ப பயன்பாடு போன்ற வசதிகளை இன்குபேஷன் மையம் ஏற்பாடு செய்கிறது.

நிகழ்வில் மைய ஒருங்கிணைப்பாளா் விஷ்ணுவரதன், ராஜ்குமாா், காமேஸ்வரா மற்றும் வேளாண் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்.சங்கா், பாா்த்தசாரதி ஆகியோா் பங்கேற்ாக அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →