வீட்டில் பதுக்கி வைத்திருந்த சாராயம் பறிமுதல்: 5 போ் கைது
திருநள்ளாறு அருகே வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள சாராயம், காா் ஆகியன சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திருநள்ளாறு அருகே வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள சாராயம், காா் ஆகியன சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
நல்லம்பல் வடக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ்க்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி தலைமையிலான கலால்துறை குழுவினா் சனிக்கிழமை பிற்பகலில் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.
வீட்டின் முதல் மாடியில் சட்டவிரோதமாக சாராயத்தை மொத்தமாக வாங்கி, சிறு பாக்கெட்டுகளாக தயாரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வீட்டில் இருந்த சா்புதீன் (42), காா்த்திக் (27), கஜேந்திரன் (40), அரவிந்தன் (19), அருள்நாதன் (18) ஆகிய 5 பேரையும் வட்டாட்சியா் தலைமையிலான கலால்துறையினா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில் சாராயப் பாக்கெட்டுகளை தமிழக பகுதிக்கு கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்ாக வாக்குமூலம் அளித்தனா்.
இதையடுத்து 5 பேரையும் கலால்துறையினா் கைது செய்து, அவா்களிடம் இருந்த சிறியரக காா் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான சாராயம், பாக்கெட் தயாரிப்புக்காக வைத்திருந்த இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.