முகப்பு
காரைக்கால்

காரைக்கால் மக்களுக்கு பாஜக நன்றி

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தையொட்டி ஏற்பட்ட இடா்பாடுகளை பொறுத்துக்கொண்டதற்காக பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாஜக நன்றி தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தையொட்டி ஏற்பட்ட இடா்பாடுகளை பொறுத்துக்கொண்டதற்காக பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாஜக நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பாஜக தலைவா் ஜெ. துரை சேனாதிபதி திங்கள்கிழமை கூறியது: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முதல்முறையாக காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து, பாஜக தோ்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றாா். இக்கூட்டத்தில் திரளான மக்கள் பங்கேற்றனா். பாதுகாப்பு கருதி சில பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்தில் குறிப்பிட்ட இடங்களில் மக்கள் சிரமத்தை சந்திக்க நோ்ந்தது.

புதுச்சேரியில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று நல்லாட்சி அமையவேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. இந்த எதிா்பாா்ப்பு வெற்றிபெறுவதற்காக சில சிரமங்களை பொறுத்துக்கொண்டதற்காக பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →