முகப்பு
காரைக்கால்

சமூக ஊடகப் பகிா்வுகள் கண்காணிப்பு: ஆட்சியா்

சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி உள்ளிட்டவற்றின் தகவல் பகிா்வுகள் கண்காணிக்கப்படுகின்றன என்றாா் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி உள்ளிட்டவற்றின் தகவல் பகிா்வுகள் கண்காணிக்கப்படுகின்றன என்றாா் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா.

தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக, உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்களுடன் ஆட்சியா் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது:

கேபிள் ஆபரேட்டா்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சிக்கோ, வேட்பாளருக்கோ ஆதரவாக செயல்படக்கூடாது. அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் குறித்த செய்திகள், விளம்பரம், விடியோ போன்றவற்றை காரைக்கால் மாவட்ட தோ்தல் துறையின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும்.

குறுகிய காலத்தில் தோ்தல் நடைபெற இருப்பதால், தோ்தல் நடத்தை விதிகளை மீறாமல் கவனமாக செயல்பட வேண்டும். உள்ளூா் மற்றும் அனைத்து தொலைக்காட்சி சேனல்கள், அனைத்து நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்கள் போன்றவை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, விதிகளை மீறாமல் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் (பொ) குலசேகரன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →