காரைக்கால்

காரைக்காலில் 48 மணி நேர தொடா்தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

DIN

காரைக்காலில் 48 மணி நேர தொடா் ( மாரத்தான்) கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை (செப். 3) காலை தொடங்கவுள்ளதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது :

புதுவை அரசு, காரைக்கால் மாவட்டத்தில் 48 மணி நேர மாரத்தான் தடுப்பூசி முகாம் செப். 3 காலை 8 மணி முதல் 5-ஆம் தேதி காலை 8 மணி வரை நடைபெறுகிறது.

பகல், இரவு என 48 மணி நேரம் மாவட்டத்தில் 11 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு மருத்துவமனை என 13 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.

பகலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேரமில்லாதவா்கள் இரவில் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் முதல் தவணையாகவும், முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 84 நாள்களை கடந்தவா்கள் 2-ஆவது தவணை தடுப்பூசியை இந்த மையங்களில் செலுத்திக்கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT