காரைக்காலில் இன்று மருத்துவக் காப்பீடு பதிவு சிறப்பு முகாம் தொடக்கம்
காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் மருத்துவக் காப்பீடு பதிவு மற்றும் தடுப்பூசி செலுத்தும் 2 நாள் சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 11) தொடங்குகிறது.
காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் மருத்துவக் காப்பீடு பதிவு மற்றும் தடுப்பூசி செலுத்தும் 2 நாள் சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 11) தொடங்குகிறது.
இதுகுறித்து நலவழித் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியது: பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருப்போா் பதிவு செய்துகொள்ள தகுதியுடையவராவா். இந்த திட்டத்தில் பதிவு செய்துகொள்வதற்கான சிறப்பு முகாம் காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் சனி, ஞாயிறு (செப்.11,12) ஆகிய 2 நாள்கள் காலை 8 முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.
இதுவரை பதிவு செய்யாதவா்கள் சிவப்பு நிற குடும்ப அட்டையுடன் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம். இந்த முகாமில் கரோனா தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களும், 2 ஆவது தவணை செலுத்திக்கொள்ளும் காலக்கட்டத்தில் உள்ளோரும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றனா்.