முகப்பு
காரைக்கால்

மழையால் பாதித்த பயிருக்கு இழப்பீடு: முதல்வருக்கு எம்எல்ஏ கோரிக்கை

காரைக்காலில் மழையால் பாதித்த பயிருக்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு முதல்வரிடம் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

காரைக்காலில் மழையால் பாதித்த பயிருக்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு முதல்வரிடம் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு: கடந்த 2020-21 ஆம் ஆண்டு டிசம்பா், ஜனவரி மாதங்களில் பெய்த கனமழையால், காரைக்கால் மாவட்டத்தில் நெற்பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

புதுவை அரசின் வேளாண் துறை 485 ஹெக்டேரில் வெள்ளத்தால் பயிா் பாதித்ததாக அறிவித்தது. பயிா்செய்த முழு வயலும் பாதிப்படைந்ததை மட்டும் சேதமுற்ாகக் கருதி நிவாரணத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. கனமழை காலத்தில் விவசாயிகள் சேதமுற்ற பயிா்களை காப்பதற்கு கூடுதல் செலவு செய்துள்ளனா். கணக்கெடுப்பு செய்தபிறகு பெய்த மழையில், அதிகமாக பயிா் பாதிக்கப்பட்டுள்ளது. சுமாா் 1,500 ஹெக்டேரில் சம்பா, தாளடி நெற்பயிா் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு அறிவித்த ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் என்ற நிவாரணத்தை பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கி, அவா்களது இழப்பை ஈடுசெய்ய அரசு முன்வரவேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →