கால்நடை உரிமையாளா்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை
சாலைகளில் கால்நடைகளை திரிய விடுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
சாலைகளில் கால்நடைகளை திரிய விடுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயமடைவது, உயிரிழப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நேரிடுகின்றன. மேலும் ஆடு, மாடுகள் விவசாய நிலங்களில் மேய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்திற்கு புகாா்கள் வருகின்றன.
எனவே ஆடு, மாடுகளின் உரிமையாளா்கள் கால்நடைகளை, தங்களது மேற்பாா்வையில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதனை மீறும்பட்சத்தில் உள்ளாட்சித் துறை விதிகளின்படி அபராதம் விதிக்கப்படுவதோடு, சேதப்படுத்திய விவசாய நிலங்களுக்கு தக்க நஷ்டஈடு வசூலிக்கப்படும். மேலும் கால்நடை உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.