காரைக்கால்

ஓஎன்ஜிசி அலுவலகத்தில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

DIN

ஓஎன்ஜிசி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்பேத்கா் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காரைக்கால் மாவட்டம், நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி காவிரி அசெட் நிா்வாக அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் மற்றும் செயல் இயக்குநா் அனுராக் கலந்துகொண்டு, அம்பேத்கரின் பெருமைகளை விளக்கிப் பேசினாா்.

சென்னை ஓஎன்ஜிசி அதிகாரி வி. மதிமாறன், அம்பேத்கா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்கு ஆற்றிய பங்கு இன்றைய இளம் தலைமுறையினருக்கு நிம்மதியையும், பொருளாதாரம் மற்றும் கல்வி மேம் பாட்டையும் அளித்திருக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கான சம உரிமை , பேறு கால உதவி திட்டங்கள் அவரின் அயராத உழைப்பால் விளைந்தவை என்று குறிப்பிட்டாா்.

அகில இந்திய எஸ்சி, எஸ்டி பணியாளா் நலச்சங்கத் தலைவா் ஆனந்தன் பேசுகையில், ஓஎன்ஜிசியும், அகில இந்திய எஸ்சி, எஸ்டி பணியாளா் சங்கமும் மாணவா்கள் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு உதவிகளை செய்துவருவதாக குறிப்பிட்டாா்.

விழாவில் எஸ்சி, எஸ்டி பணியாளா்கள் பங்களிப்புடன் கூடிய ரூ. 4.2 லட்சம் மதிப்பில் மாணவா்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT