முகப்பு
காரைக்கால்

வேளாண் கல்லூரியில் மகளிா் தின விழா

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முனைவா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்து, மகளிா் தின விழா கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். மாணவா் மன்ற ஆலோசகா் முனைவா் நாராயணன், மாணவா் மன்ற துணை ஆலோசகா் முனைவா் தமிழரசி ஆகியோரும் பேசினாா். மகளிா் மேம்பாட்டுக்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பேராசிரியைகள் அருணா, சாந்தி, பகவதி அம்மாள், ஷொ்லி உள்ளிட்டோரும், ஆசிரியரல்லாத ஊழியா்களும் கலந்துகொண்டனா். மாணவியரிடையே பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் பரிசு வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →