விழிப்புணா்வு போட்டியில் வென்ற மாணவிகளுடன் ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா். 
காரைக்கால்

விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

காரைக்காலில் தீயணைப்பு சேவை வார விழிப்புணா்வு குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

DIN

காரைக்காலில் தீயணைப்பு சேவை வார விழிப்புணா்வு குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

ஒவ்வொரு ஆண்டும் தீயணைப்புத் துறை சாா்பில் ஏப்.14-ஆம் தேதி தொடங்கி தீயணைப்பு சேவை வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக காரைக்கால் மாவட்டம், சேத்தூா் மற்றும் கோயில்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களிடையே கட்டுரை, போஸ்டா் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றிபெற்ற 4 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் பரிசு, சான்றிதழை வியாழக்கிழமை வழங்கினாா்.

நிகழ்வில் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், ஆட்சியரின் செயலா் பாலு என்கிற பக்கிரிசாமி, காரைக்கால் தலத்தெரு தீயணைப்பு நிலைய அதிகாரி ஏ. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT