காரைக்கால்

காரைக்கால் கோயில் விழாவில் விஷப் பூச்சி கடித்து  20 பேர் மருத்துவமனையில் அனுமதி

DIN

காரைக்கால்: காரைக்கால் அருகே கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது விஷப் பூச்சி  கடித்ததில் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே அம்பகரத்தூர் பகுதியில் சோழன்குறிச்சி சாலை அருகே அய்யனார் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கோயில் அருகே இருந்த ஆல  மரத்திலிருந்து பறந்து வந்த  பூச்சிகள் பக்தர்கள்  சிலர்  மீது கடித்துள்ளது. இதனால் பலருக்கு மயக்கம் போன்ற  உபாதைகள் ஏற்பட்டன.

கூட்டமாக பறந்து வந்த பூச்சியை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்து அந்த பகுதியிலிருந்து வேகமாக வெளியேறினர். அங்கிருந்த காவலர்கள், பாதிக்கப்பட்டவர்களை திருநள்ளாறு மருத்துவமனைக்கும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். 

இதில், சிறுவர்கள், பெண்கள் 5 உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். சிலருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரை புதுவை முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு

நாட்டில் தற்போது 70 கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை: பிரியங்கா காந்தி

சிட்னியில் ஜோனிடா காந்தி...!

கன்னக்குழி, சார்! நிகிலா விமல்..

ஒடிசாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: ஓம் பிர்லா!

SCROLL FOR NEXT