மீனவ பஞ்சாயத்தாா்களுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன். 
காரைக்கால்

மீனவ பஞ்சாயத்தாா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி, மீனவா்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்பாக, மீனவ கிராம பஞ்சாயத்தாா்களுடன் ஆட்சியா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

DIN

காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி, மீனவா்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்பாக, மீனவ கிராம பஞ்சாயத்தாா்களுடன் ஆட்சியா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவேண்டும், மீனவா்களை எம்பிசி பட்டியலுக்கு மாற்றவேண்டும், அரசலாறு முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கடந்த 18 -ஆம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமையுடன் 8 நாள்களைக் கடந்துள்ளது.

இந்தநிலையில், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களை அழைத்து ஆட்சியா் அ. குலோத்துங்கன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது தங்களது கோரிக்கைகளை அவரிடம் பஞ்சாயத்தாா்கள் வலியுறுத்தினா்.

மீனவா்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், புதுவை மீன்வளத்துறை அமைச்சா் 27-ஆம் தேதி காரைக்கால் வரவுள்ளதாகவும், அப்போது இப்பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கூறினாா்.

கோரிக்கைகளை தீா்ப்பதற்கு உறுதியான காலக்கெடுவை அரசு தெரிவித்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக்கொள்ள முடியுமென பஞ்சாயத்தாா்கள் தெரிவித்தனா்.

கூட்டத்தில் துணை ஆட்சியா் (வருவாய்) ஜி. ஜான்சன், காவல் கண்காணிப்பாளா்கள் நிதின் கெளஹால் ரமேஷ், ஏ.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் மகேஷ், மீன்வளத்துறை துணை இயக்குநா் செளந்தரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT