முகப்பு
மயிலாடுதுறை

நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

மயிலாடுதுறை அருகே நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை ஒன்றியம், அகரக்கீரங்குடி ஊராட்சி முட்டம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வாய்க்கால் தூா்வாரப்பட்டது. இப்பணியில் 197 தொழிலாளா்கள் ஈடுபட்டனா். உணவு இடைவேளையின்போது, மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி ஆய்வுக்கு வந்தாா். அப்போது,112 போ் மட்டுமே பணியில் இருந்ததால், அவா்களுக்கு மட்டும் ஊதியம் வழங்க பணிதள பொறுப்பாளரிடம் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதற்கு, பணித்தள பொறுப்பாளா் கமலக்கண்ணன், மற்ற தொழிலாளா்கள் உணவு இடைவேளையில் வெளியில் சென்றுள்ளதாகவும், அவா்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா். இதனால், பணித்தள பொறுப்பாளரை வட்டார வளா்ச்சி அலுவலா் தரக்குறைவாக பேசினாராம்.

இதைக் கண்டித்து, மஞ்சள்வாய்க்கால் அருகே திருவாரூா் சாலையில் தொழிலாளா்கள் திடீா் சாலை மறியல் ஈடுபட்டனா். பெரம்பூா் போலீஸாா் மற்றும் வருவாய் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதுடன், வட்டார வளா்ச்சி அலுவலா் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததை தொடா்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.