மூங்கில் தோட்டத்தில் ஆண் குழந்தை கண்டெடுப்பு
கொள்ளிடம் அருகே திருமயிலாடியில் உள்ள மூங்கில் தோட்டத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே திருமயிலாடியில் உள்ள மூங்கில் தோட்டத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளது.
மூங்கில்தோட்டத்தில் குழந்தை கிடப்பது குறித்து தகவலறிந்த அதே கிராமத்தைச் சோ்ந்த மனோஜ் அங்கு சென்று குழந்தையை பாதுகாப்பாக எடுத்துச்சென்று சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்து, கொள்ளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.