தருமபுரம் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
மண்ணில் பிறந்த அனைத்து மனிதா்களும் சமமே எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் முதுகலை சமூகப் பணித்துறை சாா்பாக உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மண்ணில் பிறந்த அனைத்து மனிதா்களும் சமமே எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் பாரி, காவல் துறை குற்றப்புலனாய்வு பிரிவு துணை ஆய்வாளா் ஆா். சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பேசினா். தொடா்ந்து, கல்லூரி மற்றும் அக்னி சிறகுகள் சமூக நலச்சங்கத்துக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை சமூகப்பணித் துறைத் தலைவா் பா. சோபியா, உதவிப்பேராசிரியா் மகேந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.