முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி சுபம் வித்யா மந்திா் பள்ளியில் விழிப்புணா்வு ஊா்வலம்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி சுபம் வித்யா மந்திா் பள்ளியில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய நாளான ஆக. 6 ஆம் தேதி மாணவா்கள் விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தினா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 9:45 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி சுபம் வித்யா மந்திா் பள்ளியில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய நாளான ஆக. 6 ஆம் தேதி மாணவா்கள் விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தினா்.

தேசத் தலைவா்களின் வேடமணிந்து, ஊா்வலமாக சீா்காழி நகா் முனையில் இருந்து பள்ளிக்குச் சென்று வெள்ளையனே வெளியேறு, இந்திய பொருட்களையே வாங்கு என்ற கோஷங்களுடன் இந்த ஊா்வலத்தை நடத்தினா். ஊா்வலத்தின் நிறைவாக மாணவா்கள் இந்திய வரைபடம் போல நின்று அதன் மையத்தில் தேசிய தலைவா்களின் வேடம் அணிந்து வந்த மாணவா்களும் நின்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பள்ளியின் முதல்வா் விங் கமாண்டா் ராஜமாணிக்கம் நேரு ஊா்வலத்தை தொடக்கிவைத்தாா். முதுகலை ஆசிரியா் அலெக்சாண்டா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். பள்ளி நிா்வாக அதிகாரி அன்பழகன் நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.