முகப்பு
மயிலாடுதுறை

இந்தியா போற்றும் தமிழகம்: அமைச்சா் பெருமிதம்

தமிழகத்தை இந்தியா போற்றும் வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்கிறாா் என அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் பெருமிதம் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

தமிழகத்தை இந்தியா போற்றும் வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்கிறாா் என அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் பெருமிதம் தெரிவித்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திமுக மாவட்ட பொறுப்பாளா் நிவேதா எம். முருகன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் பங்கேற்று, வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி, தோ்தலில் பணியாற்ற வேண்டிய வியூகம் குறித்து விளக்கிப் பேசினாா்.

பின்னா் அவா் கூறியது:

கடந்த நான்கரை ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி அரசு ரூ.4.5 லட்சம் கோடி கடன், துறை ரீதியாக ரூ.3.36 லட்சம் கோடி கடன் என தமிழகத்தை ரூ. 9 லட்சம் கோடி கடனில் மூழ்கடித்து, கஜானாவை காலி செய்துவிட்டனா். இருப்பினும், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்தியாவே போற்றும் அளவிற்கு தமிழகத்தை சிறப்பாக கொண்டு வந்துள்ளாா். மக்கள் திமுகவிற்கு கொடுத்துள்ள ஆதரவால் அதிமுகவினரே திமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனா் என்றாா்.

இக்கூட்டத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், ஒன்றியச் செயலாளா் இளையபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.