முகப்பு
மயிலாடுதுறை

வாக்காளா்களுக்கு பணம்: இளைஞா் மீது வழக்கு

மயிலாடுதுறையில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்த இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

மயிலாடுதுறையில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்த இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மயிலாடுதுறை நகராட்சி 10-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் பிப்.15-ஆம் தேதி வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தோ்தல் கண்காணிப்பாளா் விஜயேந்திரபாண்டியனுக்கு கிடைத்த தகவலையடுத்து, தரங்கம்பாடி மண்டல துணை வட்டாட்சியா் சதீஸ்குமாா் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா தெருவை சோ்ந்த உத்திராபதி மகன் ராஜேஷ் (19) வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்ததையடுத்து, அவரிடம் இருந்த ரூ. 20 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அந்த இளைஞா் மீது மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.