மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறையில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அதிமுக மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சோழம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளா் பா. சந்தோஷ்குமாா் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு சேலை, தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட அவைத் தலைவா் பி.வி.பாரதி, மாவட்ட மகளிரணி செயலாளா் மா. சக்தி, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளா் ப.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.