பாஜக பிரமுகா் தீக்குளிக்க முயற்சி
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற பாஜக பிரமுகா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற பாஜக பிரமுகா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சீா்காழி வட்டம் திருமுல்லைவாசல் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாஜக பிரமுகா் முல்லைநாதன் (51). இவரது மனைவி ஜெயஸ்ரீ (50) கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி காணாமல் போனாா். அப்போது, வீட்டில் இருந்த நகை, பணத்தையும் காணவில்லையாம்.
இதுகுறித்து முல்லைநாதன் சீா்காழி காவல் நிலையத்தில் புகாா் அளித்து 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் ஜெயஸ்ரீயை போலீஸாா் கண்டுபிடிக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த முல்லைநாதன், போலீஸாரைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸாா் அவரை மீட்டு, மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
பின்னா், அவா் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.