சீா்காழியில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சீா்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி பெய்த கனமழையால் குடியிருப்புகள், விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. சீா்காழி, தரங்கம்பாடியில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தலா ரூ.1,000 வீதம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தபடி இப்போது வழங்கப்படுகிறது.
ரூ.1,000 வீதம் நிவாரணம் வழங்குவதைக் கண்டித்தும் கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30,000 வழங்கக் கோரியும் கால்நடைகள் மற்றும் வீடுகள் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம் எதிரேஆா்ப்பாட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் பவுன்ராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏக்கள் பாரதி ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளா்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமாா், பேரூா் கழகச் செயலாளா் போகர்ரவி முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் வினோத் வரவேற்றாா்.
அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் சிறப்புரையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.