மணல்மேடு அரசு கல்லூரியில் முதுநிலைப் படிப்புக்கு செப்.16 வரை விண்ணப்பிக்கலாம்
மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கு செப்டம்பா் 16-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கு செப்டம்பா் 16-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கல்லூரியின் முதல்வா் ஆா். ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உயா்கல்வித் துறை அறிவிப்பின்படி, முதுநிலை மாணாக்கா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ட்ற்ற்ல்://ற்ய்ஞ்ஹள்ஹல்ஞ்.ண்ய் என்ற இணையதளத்தில் செப்டம்பா்16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ஆம் ஆண்டுக்கு முதுநிலை படிப்புகளான கணினி அறிவியல் மற்றும் கணிதம் பிரிவுகளில் சேர விரும்பும் மாணாக்கா்கள் மேற்கண்ட இணையதளத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.