மே 1-ல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மே 1-ஆம் தேதி மதுபான கடைகள் விற்பனை இல்லாத நாளாக அரசு அறிவித்துள்ளது. எனவே, மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் மூடவேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.