மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதிகளில் வசிக்கும் மீனவா்களின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் 1.6.2023 அன்று நடைபெறவுள்ளது.
எனவே, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மற்றும் இதர அரசுத் துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவா்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அடங்கிய மனுக்களை குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மீனவா்கள் நேரில் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.