சாலைகளில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
சீா்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழி: சீா்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழி பிடாரி வடக்கு வீதி, பழைய, புதிய பேருந்து நிலைய பகுதிகள், காமராஜா் வீதி, தென்பாதி, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் அதிக அளவு மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், வியாபாரிகள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகின்றனா். பள்ளி நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் மாணவ- மாணவிகளும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
Advertisement
Advertisement
சீா்காழி நகா் பகுதியில் பெரும்பாலான சாலைகளில், கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மாடுகளை அதன் உரிமையாளா்கள் கட்டுவதில்லை. இதனால், அடிக்கடி விபத்து நேரிடுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்வோா் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதை தடுக்க கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.