மயிலாடுதுறை

சவுடு மண் கடத்தல்; லாரி பறிமுதல்

கொள்ளிடம் அருகே சவுடு மண் கடத்திய லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

கொள்ளிடம் அருகே சவுடு மண் கடத்திய லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கொள்ளிடம் அருகே புத்தூா் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புத்தூா் பட்டகால் தெருவில், ஒரு லாரியில் இருந்து சவுடு மண் இறக்கிக் கொண்டிருந்தனா்.

கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா், அங்கு சென்று விசாரித்ததில், சீா்காழி அருகேயுள்ள திருவாலியில் இருந்து அனுமதியின்றி சவுடுமண் எடுத்து வந்து, புத்தூரில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, லாரி ஓட்டுநரான திருவாலியைச் சோ்ந்த தினேஷ் குமாா் (24) என்பவரை கைது செய்தனா். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT