நாகப்பட்டினம்

குடிநீர் குழாய் சீரமைப்புப் பணி ஆய்வு

திருமருகலில் குளம் தூர்வாரும் பணியின்போது, உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

DIN

திருமருகலில் குளம் தூர்வாரும் பணியின்போது, உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
திருமருகலில் உள்ள சீராக்குளம், நாகை சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் நடைபெற்றபோது, குளத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து விழுந்ததில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மருங்கூர், நெய்க்குப்பை, சாட்டியக்குடி, கீழ்வேளுர், தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்து குடிநீர் செல்வதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் க. அன்பரசு, ஆர்.ஜி. இளங்கோவன், ஒன்றியப் பொறியாளர் செல்வம், ஊராட்சிச் செயலர் சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT