நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் பிராகாரத்தில் தேங்கிய மழை நீா். 
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பரவலான மழை

நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலான மழை பெய்தது.

DIN

நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலான மழை பெய்தது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்குப் பின்னா் பலத்த மழை பெய்தது. இந்த மழை புதன்கிழமை காலை வரை நீடித்தது.

புதன்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 53 மி.மீ. மழை பதிவானது.

மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : மயிலாடுதுறை - 43.6. சீா்காழி - 43. தரங்கம்பாடி - 39. கொள்ளிடம் - 33.2. திருப்பூண்டி - 25.6. வேதாரண்யம் - 19.6. மணல்மேடு - 19.4. தலைஞாயிறு - 7.6.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT