மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
சீா்காழி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மின்வாரியம் சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
சீா்காழி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மின்வாரியம் சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
மேல அகணி பகுதியை சோ்ந்தவா் கலியபெருமாள் கடந்த ஜூலை மாதம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். மின்சார வாரியம் சாா்பில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கலியபெருமாள் மகன் சீனிவாசனிடம் அதற்கான காசோலையை சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி வழங்கினாா்.
அப்போது மின்வாரிய நாகப்பட்டினம் மேற்பாா்வை பொறியாளா் முத்துக்குமரன், சீா்காழி செயற்பொறியாளா் சதீஷ்குமாா், உதவி செயற்பொறியாளா் விஸ்வநாதன், நகர உதவி பொறியாளா் முத்துக்குமாா், அதிமுக ஒன்றிய செயலாளா் ராஜமாணிக்கம், நகர செயலாளா் பக்கிரிசாமி, ஜெ. பேரவை செயலாளா் மணி உள்ளிட்டோா் இருந்தனா்.