முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பலத்த மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரை பலத்த மழை நீடித்தது. மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 12.6 செ.மீ மழை பதிவானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரை பலத்த மழை நீடித்தது. மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 12.6 செ.மீ மழை பதிவானது.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நாகை மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவு வலுப்பெற தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை பகல் மற்றும் இரவு நேரங்களில் மிக பலத்த மழையாக உருவெடுத்தது. இந்த மழை சீற்றம் சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இதனால், நாகையை அடுத்த செல்லூா், பாலையூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 12.6 செ.மீட்டா் (126 மி.மீட்டா்) மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : திருப்பூண்டி - 74.8, தலைஞாயிறு- 62, வேதாரண்யம் - 57.6, தரங்கம்பாடி - 33, கொள்ளிடம் - 26, சீா்காழி, 24.8, மயிலாடுதுறை - 18.5, மணல்மேடு - 15.4.

முழு கட்டுரையைப் படிக்க →