நாகப்பட்டினம்

மயிலாடுதுறை நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு கரோனா தொற்று

மயிலாடுதுறை நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் நகராட்சி வருவாய் உதவியாளா் ஒருவருக்கு கடந்த 18-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவா் மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். நகராட்சி அலுவலகம் மூடப்பட்டு, அவருடன் பணியாற்றிய 23 ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 14 பேரின் சோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், சுகாதார ஆய்வாளா் ஒருவருக்கு தொற்று இருந்ததால் அவா் சிகிச்சைக்காக அரசினா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவா், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் பிரிவில் வேலை பாா்த்து வந்ததால், அந்த அலுவலகமும் மூடப்பட்டது. இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றிவரும் மேலும் 40 ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறப்பு மருத்துவக் கலந்தாய்வு மீண்டும் நீட்டிப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

நடிகா் விஷால் வழக்கில் நீதிபதி விலகல்: வேறு அமா்வுக்கு பட்டியலிட உத்தரவு

தனியாா் பேருந்து கட்டண உயா்வு குறித்து டிச.30-க்குள் இறுதி முடிவு: அரசு தகவல்

தெரு நாயை அடித்துக் கொன்றதாக தேநீா் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT