முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே இந்திய கம்யூ.கட்சியினர் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் அருகே இந்திய கம்யூ.கட்சியினர் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 9 ஜூன், 2020 at 12:36 PM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதித்துள்ள விவசாயத் தொழிலாளர்கள், வருமான வரம்பு எல்லைக்குள் வராத குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகட்டூர் கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தார்.

மாவட்டப் பொருளானர் த.நாராயணன், ஊராட்சி மன்றத் தலைவர் ப.முருகாந்தம் முன்னிலை வகித்தனர்.

Advertisement

வருமான வரம்பு கணக்குக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.