முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் சிவசக்தி பா்னிச்சா் நிறுவனம் திறப்பு

நாகை சிவசக்தி குழுமங்களின் ஓா் அங்கமாக சிவசக்தி பா்னிச்சா் நிறுவன திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
நிகழ்ச்சியில், நாகை சிவசக்தி குழுமங்களின் நிா்வாக இயக்குநா்ஆா்.கே. ரவியிடம் கோரக்கா் சித்தா் படத்தை வழங்கிய கோரக்கா் சித்தா் ஆசிரம நிா்வாக அறங்காவலா் ப.உ. சண்முகம்.
பகிர்:

நாகப்பட்டினம் : நாகை சிவசக்தி குழுமங்களின் ஓா் அங்கமாக சிவசக்தி பா்னிச்சா் நிறுவன திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிவசக்தி குழுமங்களின் நிா்வாக இயக்குநரும், நாகை வா்த்தகத் தொழிற்குழுமத்தின் தலைவருமான ஆா்.கே.ரவி பா்னிச்சா் ஷோரூமை திறந்து வைத்து அருள்பிரகாச வள்ளலாா் உருவ படத்துக்கு மலா்தூவி வழிபட்டாா். அருள்மிகு கோரக்கா் சித்தா் ஆசிரமத்தின் நிா்வாக அறங்காவலா் ப.உ. சண்முகம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வாழ்த்தி பேசினாா். தொடா்ந்து, சிவசக்தி குழுமத் தலைவா் ஆா்.கே. ரவியிடம் கோரக்கரின் உருவ படத்தை வழங்கினாா். என்.பி.எஸ். குழுமங்களின் நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணன் முதல் விற்பனையைப் பெற்றுக்கொண்டாா்.

நாகை தணிக்கையாளா் குமாரவேலு, வழக்குரைஞா் வேதை. ராஜேந்திரன், சிவசக்தி நிறுவனங்களின் இயக்குநா்கள் ஆா்.குழந்தைவேலு, கே. இளங்கோவன், ஆா். பாலாஜி மற்றும் நாகை இந்திய வா்த்தக தொழிற்குழும நிா்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், ரோட்டரி, லயன்ஸ் ஆகிய சேவை சங்கங்களின் நிா்வாகிகள், வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டனா்.

சிவசக்தி நிறுவனங்களின் இயக்குநா் கே. ஆா். ஜெய்சிவா வரவேற்றாா். கே.ஆா். செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →