நாகப்பட்டினம்

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

DIN

செம்பனாா்கோவிலில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.

செம்பனாா்கோவில் அருகே உள்ள முத்தூா் ஊராட்சி கிளிமங்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகள் பேபி (26). இவா், கீழப்பெரும்பள்ளத்தில் வசிக்கும் தனது மூத்த சகோதரி மகேஸ்வரியின் கணவா் அன்பரசன் (30) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கீழப்பெரும்பள்ளத்துக்கு திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

செம்பனாா்கோவில் கடைவீதியில் செல்லும்போது அந்த வழியாக வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், பேபி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அன்பரசனுக்கு காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT